வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்...

வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்...

திருவள்ளூர் | திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயில் மாசி பெருவிழா நிகழ்ச்சி திருக்கோயில் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஐந்தாம் நாள் இரவு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தாயாருடன் சிறப்பு வெள்ளி கவசம் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளினார்.

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருக்கோயில் மாத வீதியில் முருகப்பெருமாள் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் காளி மற்றும் துரியோதனன் வேடமடைந்த கலைஞர்கள் நடனம் ஆடினார்கள்.

மேலும் பம்பை மேலங்களுடன் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் இன்னிசை நிகழ்ச்சியும் கண்டு களித்தனர்.

மேலும் படிக்க | திருச்செந்தூர் கோயிலில் தீபாராதனை தரிசனம்...