சட்டவிரோதமாக மணல் கடத்தல்...! பறிமுதல் செய்த போலீசார்..!

சட்டவிரோதமாக மணல் கடத்தல்...! பறிமுதல் செய்த போலீசார்..!
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் சட்டவிரோதமாகவும் முறையான அனுமதி இல்லாமல் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களின் வாகனத்தையும், வாகன உரிமையாளர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் மணிமுத்தாற்றில் அதிக அளவு மணல் திருட்டு நடைபெறுவதாக சங்கராபுரம் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பெயரில் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர்   அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் முனியன் என்பவர் சட்டவிரோதமாக அரசம்பட்டு மணிமுத்தாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை கண்டறிந்தனர். பின்னர், முனியன்  காவல்துறையினரை கண்டதும் வாகனத்தை விட்டு தப்பி ஓடி உள்ளார். அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய முனியன் என்பவரை சங்கராபுரம் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com