கிணற்றில் தவறி விழுந்த ஆடுகள் பத்திரமாக மீட்பு...

கிணற்றில் தவறி விழுந்த 3 ஆடுகளை கொட்டும் மழையில் தீயணைப்புதுறையினர் உயிருடன் மீட்ட நிகழ்வு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

கிணற்றில் தவறி விழுந்த ஆடுகள் பத்திரமாக மீட்பு...

புதுக்கோட்டை | அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் பாக்கினிசா.இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான ஆடுகளை அப்பகுதியில் உள்ள  குடியிருப்பு பகுதியில் மேய்த்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கே மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மூன்றும் அருகே உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதைப் பார்த்த பாக்கினிசா அக்கம்பக்கத்தினரை அழைத்து கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை மீட்க முயற்சி செய்தார். இருப்பினும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது மழையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனர்.  பின்னர் 3 ஆடுகளும் ஆட்டின் உரிமையாளர்  பாக்கினிசாவிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.தீயணைப்புத் துறையினரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

மேலும் படிக்க | கடல் அலையில் சிக்கிய வடமாநில இளைஞர்...!