தந்தை இறந்தும், சோகத்தில் தேர்வை எழுதிய மாணவர்...

தந்தை உயிரிழந்த நிலையிலும்,  மாணவர் ஒருவர் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தந்தை இறந்தும், சோகத்தில் தேர்வை எழுதிய மாணவர்...

கிருஷ்ணகிரி | ஊத்தங்கரை அடுத்த கல்லாவி கீழ் காலனியை சேர்ந்தவர் ஜெகத். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது தந்தை கோட்டீஸ்வரன் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

தற்போது, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தந்தை இறந்த சோகத்திலும், ஜெகத் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார். இவருக்கு ஆசிரியர்கள் ஆறுதல் கூறி, அழைத்து சென்றனர். இந்த முறை வெறும் 5% மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதாத நிலையில், இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.