விபத்தில் தூக்கி வீசப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் பலி...

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் தூக்கி வீசப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் பலி...

தென்காசி | சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி(60) என்பவர் சங்கரன்கோவில் இருந்து மலையாங்குளம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்க் நோக்கி இரு சக்கர வாகனத்தை திருப்பியுள்ளார்.

அப்போது தச்சநல்லூர் பகுதி அழகனேரியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் தனது குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்று விட்டு இரண்டு கார்களில் குடும்பத்தாருடன் வந்து கொண்டிருந்த நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது.

மேலும் படிக்க | பட்டாசு ஆலை வெடிவிபத்து... அண்ணாமலை ட்விட்டர் பதிவு...தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

அதில் இருசக்கர வாகனத்தில் வந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி தூக்கி வீசப்பட்டதில் முன்னாள் ராணுவ வீரர் கணபதி சம்பவ இடத்தில் பலியானார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  நகர காவல்துறையினர் அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முன்னாள் ராணுவ வீரர் கணபதி மீது கார் மோதி தூக்கி வீசப்படும் நெஞ்சை பதபத வைக்க கூடிய சிசிடிவி கட்சியானது  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ருவாண்டா நாட்டு இளைஞர் கைது...


ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜர்!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் திருமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். 

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே 22 அன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு பல்வேறு போராட்டக் குழுவினர் மீது காவல் துறையினரால் பல்வேறு பொய்வழக்குகள் பதியப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியை சேர்ந்த அக்ரி பரமசிவன் என்பவர் மீது புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை அவர்களால் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

சம்மன்கள் அளித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால்  - பிடிவாரண்ட்

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கானது தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையானது கடந்த 2020 முதல் நடைப்பெற்று வரும் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த திருமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன்கள் அளித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால்  (திருநெல்வேலி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) திருமலை) எதிராக தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஆர்.செல்வகுமார் கடந்த மார்ச் மாதம் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

 

மேலும் படிக்க | வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கோஷங்கள்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் திருமலை மீது ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை, சிபிஐ வழக்கு விசாரணை, மனித உரிமைகள் வழக்கு விசாரணை, தாழ்த்தப்பட்டோர் ஆணைய வழக்கு விசாரணை மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை தற்போது துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு குறித்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

அக்டோபர் மாதம்  திருமலையை சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் திருமலையை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் முதன் முறையாக கொல்லிமலையில் ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியும் பரிசோதனை முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் எல்லகிராய்பட்டி கிராமத்தில் தமிழ்நாட்டின் முதன்முறையாக ஹீமோகுளோபினோபதி, தலசீமியா மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட நோய்களை கண்டறியும் பரிசோதனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதற்கு முன்னதாக அப்பகுதி மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஹீமோகுளோபினோபதி பரிசோதனை செய்து கொண்டால் ரத்தம் சர்ந்த நோய்களை கண்டறிவது மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

மேலும், மலைவாழ் மக்கள் நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்வதால் ரத்தம் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதாகவும் அதற்காக ரத்தம் தொடர்பான நோய்களை கண்டறியும் வகையில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்து 1 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகளை கண்டறிய முடியும் எனவும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனையடுத்து,  இன்று தொடங்கப்பட்ட பரிசோதனை முகாமில் ஆண்கள், பெண்கள் என முதற்கட்டமாக 10 மலைவாழ் மக்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்து உடனடியாக 1 நிமிடத்தில்  முடிவுகளை தெரிவித்தது குறிப்பிட்டத்தக்கது.

இதையும் படிக்க:ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? அன்புமணி கேள்வி!

விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் மீண்டும் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான  தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் இந்து சமய நிலைத்துறை கோயிலுக்கான பராமரிப்பு பணிகளை செய்ய முன் வராததால் கிராம மக்களே கோவிலுக்கான பராமரிப்பு மற்றும் திருவிழா  பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றபோது மேல்பாதி காலனி பகுதியை சார்ந்த பட்டியலின மக்கள் கோவிலில் உள்ளே நுழைய முயன்ற போது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்ய கூறி பட்டியலின மக்களை அனுப்பி வைத்து விட்டனர். கோவில் உள்ளே சென்று தான் சாமி தரிசனம் செய்வோம் என பட்டியலின மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 இதனை அடுத்து கோவிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மாட்டோம் என ஊர் பொதுமக்களும் கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.  தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் இரண்டு தரப்பினரிடையே இரண்டு முறையும் கோட்டாட்சியர் தலைமையில் ஐந்து முறை சமாதான கூட்டங்கள் நடைபெற்றது. இதுவரை சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில், இன்று காலை மீண்டும் கோவிலுக்குள் கிராம பெண்கள் குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டவர்கள் தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உரிய பராமரிப்பு இல்லாததால் பூக்கள் அழுகி நிலையில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

கோடை சீசனையொட்டி சிம்ஸ் பூங்காவில் நாளை மறுதினம் பழக் கண்காட்சி நடைபெற உள்ளதையொட்டி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டிருந்தன. 

இந்நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் ஏராளமான மலர்கள் அழுகிய நிலையில் உள்ளன. இதனால், அரிய வகை பூக்களை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். 

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பராமரிப்பு இல்லாமல் பூக்கள் அழுகி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

 

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை மறுதினம் நடைபெற உள்ள பழக்கண்காட்சிக்கு  2 லட்சத்திற்கு மேற்பட்ட மலர்  செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன . இவைகள் சரியான பாரமறிப்பு  இல்லாமல் கால நிலை மாற்றத்தாலும்  பூக்கள் அழுகி காணப்படுகிறது. 

இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அரிய வகை பூக்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். தற்போது கால நிலை மாற்றதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்படுகிறது.

இதையும் படிக்க    | நடிகர் விஜய்சேதுபதி மீது கதை திருட்டு புகார்...!

துறையூர் அம்மா உணவகத்திற்கு குப்பை வண்டியில் அரிசி மூட்டைகள் வந்திறங்கியதை பார்த்த மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை என இரு வேளைகளில் பணியாளர்கள் சுமார் 12 பேர் சமையல் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்து வருகின்றனர். 

மேலும் அம்மா உணவகத்தில் காலை, மதியம் என இரண்டு வேளைகளில் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படும் நிலையில், நேற்று மதியம் துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மினி லாரியில் அம்மா உணவகத்திற்கு அரிசி மூட்டைகள் வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாமர மக்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்கள் பசியாறும் உணவுக்குண்டான அரிசியை  சுத்தம் செய்யப்படாத குப்பை லாரியில், எடுத்துவந்த இந்த நிகழ்வு பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் பொது மக்களை முகம் சுளிக்கும் வண்ணம் அமைந்தது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது  துறையூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளரின் நேரடிப் பார்வையில் உள்ள அம்மா உணவகத்தில் தரம் , சுகாதாரம் உள்ளிட்டவற்றை தினந்தோறும் ஆய்வு செய்து, சுத்தமான உணவை வழங்கிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இதையும் படிக்க:"பாலியல் தொழில் குற்றமில்லை" நீதி மன்றம் அதிரடி!