10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மின் இணைப்பு.....மகிழ்ச்சியில் மக்கள்!!!

10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மின் இணைப்பு.....மகிழ்ச்சியில் மக்கள்!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு இன்றி தவித்து வந்த மலைவாழ் மக்களின் 27 வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் நேரில் சென்று மின் இணைப்பு வழங்கினார்

தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நீண்ட நாட்களாக குடியிருப்புக்‍களுக்‍கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.  இந்நிலையில் இந்த கோரிக்கையானது மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர். 

இதனையடுத்து குறிஞ்சி நகரில் உள்ள 27 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.  இதனை ஆட்சியர் அனிஷ் சேகர் நேரில் சென்று துவக்கி வைத்து, பழங்குடியின மக்களுக்கு பொங்கல் பரிசினையும் வழங்கினார்.  பின்னர் அப்பகுதியில் நடந்து வரும் அரசுப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  இந்தியாவின் இலக்கை அடைய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி....