கழிவறையில் மயங்கி விழுந்து மின் ஊழியா் பலி...

திருத்தணி நகராட்சி கழிவறையில் மின் ஊழியா் மயங்கி விழுந்து உயிாிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழிவறையில் மயங்கி விழுந்து மின் ஊழியா் பலி...

திருவள்ளூர் | திருத்தணி நகராட்சியில் மின் பணியாளராக பணியாற்றுபவர் நடராஜன் வயது(54) இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு வந்த நடராஜன் நகராட்சி அலுவலகம் பகுதி உள்ள பாத்ரூம் பகுதிக்கு சென்றுள்ளார்.

அந்த பகுதியில் மயங்கி விழுந்து இருப்பதாக மற்றொரு நகராட்சி பணியாளர் கார்த்தி பார்த்து உடனடியாக நகராட்சி மற்ற பணியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு நகராட்சி ஊழியர்கள் மூலமாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு நடராஜன் அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் படிக்க | கணவரின் இறுதி சடங்கிற்கு சென்ற பெண்ணின் வீட்டில் நடந்த கொள்ளை...

திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜன் மருத்துவமனைக்கு எடுத்து வருவதற்கு முன்பே இவருக்கு உயிர் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.  நடராஜன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது,

இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகராட்சியில் பணிக்கு வந்த மின்பணியாளர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நகராட்சி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன நகராட்சி ஊழியர் நடராஜனுக்கு அனுசியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஏரியில் படகு கவிழ்ந்து ஆறு பேர் பலி...