தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்...

நாட்றம்பள்ளியில் ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் திருவிழா! சேவ ஆட்டம் ஆடி தலையில் தேங்காய் உடைத்தும் தீ மிதித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்...

திருப்பத்தூர் | நாற்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும்  ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் காலை முதல் அபிஷேகம், தீபாராதனை, பொங்கல் வைத்தல், பம்பை சிலம்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் படிக்க | மாசி பௌர்ணமிக்காக கூட்டம் கூட்டமாக சாமி தரிசணம் செய்த பக்தர்கள்...

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் சேவ ஆட்டம் ஆடி சாமி இறங்கிய பின் பக்தர்கள்  தலையில் தேங்காய் உடைத்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழாவில் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பத்திற்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

மேலும் படிக்க | ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில் தெப்பத்திருவிழா...