போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு...

சென்னையில் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Published on

சென்னை | கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த கொத்தனாரான முருகன், அவருடன் வேலை செய்த பெண்ணின் 4 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பாக எம்.கே.பி., அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2015ஆம் ஆண்டு ஜனவரியில் பதிவான வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணை நடந்தபோது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார்.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com