வீட்டின் பூட்டை உடைத்து பணம்,நகை கொள்ளை..மர்ம நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு...

வீட்டின் பூட்டை உடைத்து பணம்,நகை கொள்ளை..மர்ம நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு...

திண்டிவனம் அடுத்த ஏம்பாக்கத்தில் இரவு நேரத்தில் வீட்டின்  பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

திண்டிவனம் அடுத்த ஏம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (42) ,விவசாயியான இவருக்கு ஏம்பாக்கம் கிராமத்தில் ஓர் வீடு இருக்கும் நிலையில், விவசாய நிலத்திலும்ஓர் வீடு உள்ளது. இந்நிலையில் இவரது மனைவி ராஜேஸ்வரி (38) கிராமத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு இருந்த நிலையில் இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் டிராக்டரில் உழவு ஓட்டுவதற்காக செல்வம் சென்றுள்ளார். அப்போது ஆட்கள் யாரும் இல்லாத நிலையை அறிந்த மர்ம  நபர்கள் விவசாய நிலத்தில் இருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டின் உள்ளே இருந்த பீரோவையும் உடைத்து பீரோவில் இருந்த ஆறு சவரன் நகை மற்றும் நெல்லில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 47 ஆயிரம் ரூபாய் பணம், நிலத்தின் பத்திரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .

மேலும் தெரிந்து கொள்ள | ஊருக்குள் புகும் வனவிலங்குகள்...! அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..!

மறுநாள் செல்வம் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதும், வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.இதேபோன்று வலக்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாதிரி கிராமத்தில் ஐந்து வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை மற்றும் கொலை முயற்சி சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவம்  இப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையேஅதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.  இந்நிலையில்,ஒலக்கூர் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் முறையாக ஈடுபட வேண்டும் என்று இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.