அழகு முத்துமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா...

அந்தியூர் அழகு முத்துமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அழகு முத்துமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா...

ஈரோடு | அந்தியூர் தவிட்டு பாளையத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெறும்.

அதன்படி கடந்த வாரம்  பூச்சாற்றுதல் மற்றும் கம்பம் நடுவிழாவுடன் விழா துவங்கியது. நாள்தோறும் பெண்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி அம்மனை சிறப்பு அலங்காரத்தில் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் விழாவிலன் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது.

முன்னதாக பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி மற்றும் மாவிளக்கு எடுத்தல் அம்மை அழைத்தல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

மேலும் படிக்க | பாரம்பரிய முறைபடி விமர்சையாக நடைபெற்ற தீமிதி திருவிழா...