புகழ்பெரும் பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம்...

தஞ்சை பெரிய கோவிலில், இன்று ஆருத்ரா தரிசனம் ராஜ வீதிகளில் வீதிவுலாவுடன் நல்ல படியாக நடந்து முடிந்தது.

புகழ்பெரும் பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம்...

தஞ்சாவூர் | உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவியபொடி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நடராஜர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் படிக்க | நெல் காத்த நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்...

தொடர்ந்து வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார். பின்னர் சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதையடுத்து கோயில் வளாகத்தில் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் மூன்று முறை ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் - புகைப்படங்கள்