விடுமுறை அறிவிப்பால் மது வாங்க முந்தியடித்த மது பிரியர்கள்...

விடுமுறை அறிவிப்பால் மது வாங்க முந்தியடித்த மது பிரியர்கள்...

தருமபுரி | நாளை திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2023 வியாழக்கிழமை குடியரசு தினம் என அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மது விற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடிவைக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டது.

இதனால், இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளில் மதுபிரியர்கள் நாளை மது அருந்த தேவையான மதுவை இன்றே கடைகளில் வாங்கி செல்வதால் மதுபானக்கடைகளின் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்களும்  சாக்கு பைகளில் மது வாங்கி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வாங்கி சென்றனர்.

மேலும் படிக்க | மதுபோதை பயணியை தாக்கிய நடத்துனரின் வீடியோ வைரல்...