வெளிநாட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண்...! மர்மமான முறையில் இறந்த சோகம்...!

வெளிநாட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண்...! மர்மமான முறையில் இறந்த சோகம்...!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழநெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லதா என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியா நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வீட்டில் உள்ளவர்களுடன்  தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இந்நிலையில் நேற்று இரவு  மலேசியாவிற்கு அனுப்பி வைத்த  ஏஜென்ட்  முனி என்பவர் லதா இறந்து விட்டதாக அவரது கணவருக்கு  தெலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். தாய் இறந்த சம்பவத்தை  கேட்டு தந்தையும் மகனும்  மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். ஏஜென்ட் முனியிடம் லதா பலமுறை தன்னை ஊருக்கு அனுப்பிவிடுங்கள் என கோரியும் ஏஜென்ட் அமைதியாகவே இருந்து, இரண்டு ஆண்டுகள் பணி முடிந்து பின்னர், வேறொரு இடத்திற்கு கொத்தடிமையாக வேலைக்கு அனுப்பியுள்ளார். சொந்த ஊர் செல்ல தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், டிக்கெட் போட ஏஜென்டிடம் பணமும் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணத்தையும் வாங்கி அவர் ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார். எனவே தமிழக அரசு தலையிட்டு லதாவின் உடலை தமிழகத்திற்கு  கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருடைய மரணத்திற்கு காரணமான ஏஜென்ட் முனி மற்றும் அவரை கொத்தடிமையாக நடத்திய மலேசிய குடும்பத்தை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும்  வேதனையுடன் தமிழக அரசுக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.