தொடர் கனமழையால் நள்ளிரவில் இடிந்து விழுந்த வீடு...!

தொடர் கனமழையால் நள்ளிரவில் இடிந்து விழுந்த வீடு...!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அந்தியூர் அருகே உள்ள அண்ணமார் பாளையம் பகுதியில் வேலுமணி (36) என்பவர் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வேலுமணி அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 11 மணி அளவில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. சத்தம் கேட்டு  கணவன் மனைவி இருவரும் எழுந்துள்ளனர். பின்னர் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுவதை பார்த்தவுடன் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர். இதனால் அதிர்ஷ்டவசமாக நான்கு பேரும் உயிர் தப்பினர். இந்நிலையில் இவர்கள், அரசு தங்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.