கள்ளக்காதலன் பேச மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட பெண்கவுன்சிலர்...!

கள்ளக்காதலன் பேச மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட பெண்கவுன்சிலர்...!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பேச்சித்தாய் (37). இவருக்கும் போகநல்லூர் பகுதியில் உள்ள ஒருவருக்கும் திருமணம் முடிந்து அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பேச்சித்தாய் தனது இரு குழந்தைகளுடன் போகநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் போட்டியிட்ட பேச்சித்தாய், அந்த பகுதியில் உள்ள இளைஞர்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, போகநல்லூர் பஞ்சாயத்து துணை தலைவருக்கான தேர்தலில் பேச்சித்தாய் போட்டியிட்ட நிலையில், அதில் தோல்வியடைந்துள்ளார்.

இந்த நிலையில், தான் கவுன்சிலர் ஆவதற்கு பெரும் உதவியாக இருந்த 22 வயது உறவுக்கார இளைஞர் ஒருவருக்கும், பேச்சிதாயுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலர்கள் போல் ஊர் சுற்றி வந்துள்ளனர். பின்னர் ஊர் மக்களுக்கு இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்த நிலையில், பேச்சித்தாய் அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, அந்த இளைஞரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். கள்ளக்காதலனை பிரிந்த மன வருத்தத்தில் இருந்த பேச்சித்தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவே, அவரை அவரது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.அந்த இளைஞரையும் அவரது பெற்றோர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 இந்த நிலையில், தொடர்ந்து பேச்சித்தாய் அந்த இளைஞருக்கு போன் செய்து தனது கள்ளகாதலை வளர்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த இளைஞரோ தனது பெற்றோரின் பேச்சைக் கேட்டு பேச்சித்தாயின் அழைப்புகளை ஏற்காமல் இருந்துள்ளார். பல தொடர்பு எண்களை பயன்படுத்தி பேச்சித்தாய் அந்த இளைஞரை தொடர்பு கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் எகடுப்பான அந்த இளைஞர் அழைப்பை ஏற்று 'உன்னிடம் பேச விருப்பம் இல்லை' என கூறி அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

 இதனால் மன வேதனை அடைந்த பேச்சித்தாய் தனது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதலன் பேச மறுத்ததால் இரு குழந்தைகளை தனியாக தவிக்கவிட்டு, பெண்கவுன்சிலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.