தந்தை வாங்கிய கடனுக்காக மகனை கடத்தியவர்கள் கைது...!

ஆவடி அருகே தந்தை வாங்கிய கடனுக்காக, மகனை கடத்திய கந்து வட்டிக்காரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தை வாங்கிய கடனுக்காக மகனை கடத்தியவர்கள் கைது...!

ஆவடி அருகே தந்தை வாங்கிய கடனுக்காக, மகனை கடத்திய கந்து வட்டிக்காரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள கொள்ளுமேடு, காமராஜர் தெருவை சேர்ந்த மணி, மதுரவாயலைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம், 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சரிவர வட்டி செலுத்தாததால் ஆத்திரமடைந்த சண்முகம், மணியின் மகன் சேகரை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், 2 லட்சம் பணத்தை கொடுத்து விட்டு, சேகரை மீட்டு வந்த மணி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், சேகரை கடத்திய பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான சண்முகத்தை தேடி வருகின்றனர்.