கள்ளக்காதலனோடு ஓடிய தங்கை திவ்யா... ஆத்திரத்தில் பெற்றோரை வெட்டிய அண்ணன்!!

தங்கையை அழைத்துக்கொண்டு ஓடியதால் ஆத்திரத்தில், கள்ளக் காதலனின் தாய் தந்தையரை கத்தியால் வெட்டிய அண்ணன் மற்றும் கூட்டாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலனோடு ஓடிய தங்கை திவ்யா... ஆத்திரத்தில் பெற்றோரை வெட்டிய அண்ணன்!!

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசித்து வரும் கோதண்டம், சாந்தி தம்பதியினருக்கு சேட்டு என்ற மாற்றுத் திறனாளி மகன் ஒருவரும் உள்ளார். கடந்த சில மாதங்களாக சேட்டு அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி சேட்டுடன் திவ்யா ஓடிவிட்டதாகவும், பின் கடந்த 12 ஆம் தேதி திவ்யாவின் வீட்டார் திவ்யா-வை கண்டுபிடித்து சமாதானம் செய்து அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து நேற்று காலை மீண்டும் சேட்டு திவ்யா-வை அழைத்துக்கொண்டு ஓடிவிட்டதால் ஆத்திரமடைந்த திவ்யா-வின் அண்ணன் தினேஷ் தனது கூட்டாளிகளான நவீன், பெருமாள் மற்றும் சிலருடன் சேர்ந்து நேற்றிரவு தங்களின் வீட்டு வெளியே நின்றுகொண்டிருந்த சேட்டின் தந்தை கோதண்டம் மற்றும் தாய் சாந்தி ஆகியோரை சுற்றிவளைத்து கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இந்த திடீர் தாக்குதலால் தலை, நெற்றி, கை மற்றும் தோள்பட்டையில் வெட்டுக் காயமடைந்து நிலைகுலைந்த சேட்டின் தாய் தந்தையரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்ட கோட்டூர்புரம் காவல் துறையினர் தினேஷ்-ன் பெற்றோர் மற்றும் மனைவி-யை காவல் நிலையம் அழைத்துச் சென்று தலைமறைவாக உள்ள தினேஷ் மற்றும் கூட்டாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள தினேஷ் மற்றும் நவீன், பெருமாள் உள்ளிட்ட கூட்டாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.