“வெளிய சொன்னா...”- பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய ஆசிரியர் கைது!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியரை 6 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
“வெளிய சொன்னா...”- பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய ஆசிரியர் கைது!!!
Published on
Updated on
1 min read

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 52 வயதான ஆசிரியர் ஸ்டீபன் அந்தோணிராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நத்தம்பட்டியில் அரசு உதவிபெறும் ஆர்.சி.உயர்நிலைப் பள்ளியில் 358 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.சமூகவியல் ஆசிரியராக பணியாற்றியவரும் ஸ்டீபன் அந்தோணிராஜ் என்பவர் அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

“இதை வெளியில் யாரிடமும் சொன்னால் மாணவியை கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுவதைத் தொடர்ந்து மாணவியை அடிக்கடி பாலியல் தொல்லை செய்ததாகவும் பெற்றோரிடம் மாணவி கூறினார். இந்நிலையில் பள்ளி முன்பு மாணவியின் பெற்றோர், உறவினர் திரண்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்டீபன் அந்தோணி ராஜை நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாணவி, பெற்றோரிடம் விசாரணை நடத்திய பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்டீபன் அந்தோணிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், ஒரு சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக இவர் துன்புறுத்தல் செய்தது தெரிய வந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com