இப்படியெல்லாம் ஒரு தாயா? மதுபோதையால் நடந்த கோர சம்பவம்!

சென்னையில் குடிபோதையில் 2 ½ வயது பெண் குழந்தைக்கு சிகரெட் மூலம் சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் இரண்டாவது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படியெல்லாம் ஒரு தாயா? மதுபோதையால் நடந்த கோர சம்பவம்!

சென்னை: சாஸ்திரி நகர் 7வது லேன் பகுதியில் வசிப்பவர் கன்னியம்மா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள் பானு (28) என்பவருக்கு விமல்ராஜ் என்பவருடன்  திருமணம் நடைபெற்று 2 ½ வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது.

மேலும் படிக்க | மதுபோதையால் நடந்த கோரம்! மாணவரின் உறுப்புகள் தானம்!

பானுவுக்கும் அவரது கணவர் விமல்ராஜுகும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பானுவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்னர் பானு தனது குழந்தை ஏஞ்சலுடன் ஜெகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று பானு தனது தாய் கன்னியம்மாவை தொலைபேசியில் அழைத்து குழந்தை ஏஞ்சல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மருமகளை கொலை செய்த மாமனார்.. ஆண் நண்பர்களுடன் நெருக்கம் காட்டியதால் நடந்த விபரீதம்..!

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற கன்னியம்மா குழந்தையை நேரில் கண்டபோது குழந்தை ஏஞ்சல் முகத்தில் சிராய்ப்பு காயம் மற்றும் முகத்தில் சூடு வைத்து காயம் ஏற்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

பின்னர் குழந்தையின் பாட்டியான கன்னியம்மா உடனே குழந்தை ஏஞ்சலை அழைத்துக்கொண்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | சகோதரனைக் காப்பாற்ற தானும் கிணற்றில் குதித்து இருவரும் பலி!

அதனடிப்படையில் சாஸ்திரி நகர் போலீசார் இது குறித்து கன்னியம்மாவிடம் விசாரணை நடத்தியதில் மகள் பானு தனது 2வது கணவர் ஜெகனுடன் சேர்ந்து குடிபோதையில் முதல் கணவருக்கு பிறந்த  குழந்தை ஏஞ்சலை அடித்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் குழந்தை ஏஞ்சலின் தாய் பானு, அவரது இரண்டாவது கணவர் ஜெகன் ஆகிய இருவரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத்தால் மனைவியை இழந்த கணவன்!