17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரண்டாவது கணவரை கொலை செய்த கொடூரம் ...

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி டிரைவர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரண்டாவது கணவரை கொலை செய்த கொடூரம் ...

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டிணத்தை சேர்ந்தவர் அழகம்மாள். இவருக்கும் சரவணன் என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் அழகம்மாள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அழகம்மாள் கூலி வேலைக்கு செல்லும்போது தொட்டில்பட்டியை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி  ஆறுமுகம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அழகம்மாள் புதூர் காடு பகுதியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் செல்லவேலை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் செல்லவேல் வாய்கால் கரையில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகம்மாளின் முன்னால் காதலன் ஆறுமுகம், மற்றும் அவரது அண்ணன் பேரனான 17 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுவனுக்கும் அழகம்மளுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும் இதனை கண்ட செல்லவேல் சிறுவனின் வீட்டுக்கு தெரிய படுத்துவதாக மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் செல்லவேலை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.