ஃப்ரீ பையர் கேமுக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் செல் போனில் ஃப்ரீ பையர் கேமுக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃப்ரீ பையர் கேமுக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் செல் போனில் ஃப்ரீ பையர் கேமுக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் சசிகுமார்.  பிஎஸ்சி படித்த பட்டதாரி இளைஞரான இவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், பிரீபையர் கேமுக்கு அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல் விளையாட்டிலேயே மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் உள்ள பேனில் தூக்கிட்டு, சசிகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.