தவறான சிகிச்சை... போராட்டத்திற்கு பிறகு பெறப்பட்ட புகார்!!

தவறான சிகிச்சை... போராட்டத்திற்கு பிறகு பெறப்பட்ட புகார்!!

தலைமை காவலரின் மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரம், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்..

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணியின் 10 வயது மகள் பிரதிக்ஷா.  அவரது 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு பணிபுரியும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார்.

மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்‌ஷாவின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் எழும்பூர்  குழந்தைகள் நல மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதிஷ்ஷாவுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக பாதம் கருகியதுடன் உடலில் உள்ள இரத்தம் கெட்டுப்போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தங்கள் அனுமதியின்றி இரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டதன் விளைவால் வலிப்பு நோயும் ஏற்ப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடந்தது எனவும், மருத்துவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோதண்டபாணி தலைமை செயலக வாசலில் பாதிக்கப்பட்ட தனது மகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.  இதனால் தலைமை செயலகம் வெளியே பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் துணை ஆணையர் உத்தரவின் பேரில் அவர் பணிப்புரியும் ஓட்டேரி காவல் நிலையத்தில் அவரிடம் இருந்து புகாரானது பெறப்பட்டுள்ளது.  

அந்த புகாரில் தனது மகளுக்கு கடந்த ஆண்டு மருத்துவமனையால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  அதனால் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், புகார் மீது வழக்கு பதிவு செய்து சிபிசிஐடிக்கு மாற்றிடவும்,  இரண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைத்திடவும், குழந்தையின் மருத்துவ அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:  திருச்சி மாநாடு... சாதிப்பாரா ஓபிஎஸ்...!!