பெண் குளிப்பதை மறைந்திருந்து பார்த்த வாலிபர்... வசமாக சிக்கியதால் அடுத்து செய்தது என்ன?

பெண் குளித்ததை மறைந்திருந்து பார்த்த வாலிபர் சிலரின் தரைக்குறைவான பேச்சால் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது. 

பெண் குளிப்பதை மறைந்திருந்து பார்த்த வாலிபர்... வசமாக சிக்கியதால் அடுத்து செய்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் மாது, தனியார் நிறுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.  

இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் குளிப்பதை மறைந்திருந்து பார்த்துள்ளார்.  இதை கவனித்த அந்த பெண் தனது உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்து உள்ளார். அந்தப்பெண் கூறியதை கேட்டு ஆத்திரம் அடைந்த  உறவினர்கள் மாதுவின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அங்கிருந்த மாதுவை அவர்கள் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த மாது, பெண்ணின் வீட்டார் பேசியதையே மனதில் நினைத்துக்கொண்டு அவமானம் தாங்காமல் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாதுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.