"அயன்" படம் பாணியில் ஹெராயின் கடத்தல்.. உகாண்டா நாட்டு பயணிகள் கைது!!

அயன் திரைப்பட பாணியில் சார்ஜாவில் இருந்து, 5.56 கோடி மதிப்பிலான ஹெராயின் மாத்திரைகளை விழுங்கி சென்னைக்கு கடத்தி வந்த உகாண்டா நாட்டு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

"அயன்" படம் பாணியில் ஹெராயின் கடத்தல்.. உகாண்டா நாட்டு பயணிகள் கைது!!

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் பெருமளவில், போதை மாத்திரைக்லள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், சார்ஜா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில், உகாண்டா நாட்டு பயணி ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து சோதனையில் ஏதும் சிக்காததால், அவரது வயிற்றை ஸ்கேன் செய்த போது, அயன் திரைப்பட பாணியில் போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் இருந்து 5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 794.64 கிராம் எடைக் கொண்ட  ஹெராயின் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.