இரு சக்கர வாகன திருடர்கள் 3 பேர் கைது - 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்!!

புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய கடலூரை சார்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரு சக்கர வாகன திருடர்கள் 3 பேர் கைது - 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்!!

கிருமாம்பாக்கம் பகுதியில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த காவல்துறையினர்,  நிற்காமல் சென்ற இரு சக்கர வாகனம் ஒன்றை விரட்டிப் பிடித்து அதிலிருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசவே, சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தொடர்ந்தனர். அதில் வைத்திக்குப்பம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் திருடு போன வாகனம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து  வண்டியை ஓட்டி வந்த கடலூரை சேர்ந்த தினேஷ்ராஜ், எழிலரசன், பரத்குமார் ஆகியோரை கைது செய்து, அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 5 விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களையும் கைப்பற்றினர்.