ஆந்திராவிலிருந்து சென்னைக்கு தொடரும் கடத்தல்... திருத்தணி அருகே காரில் செம்மரக்கட்டை கடத்திய 3 பேர் கைது
திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டை கடத்திய மூவர் கைது.

ஊராட்சி ஒன்றிய பள்ளியில், சாதிய பாகுபாடு பார்த்து, காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றி வந்த இருவரை, பணியை விட்டு துரத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், மாமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிப்பளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தமிழக அரசு கொண்டுவந்த காலை சிற்றுண்டி உணவிற்கு, மகளிர் திட்டத்தின் மூலம் அப்பகுதியை சேர்ந்த மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆண்டிப்பாளையம் அடலின் ரெக்சி , செல்வராணி, பரமேஸ்வரி என மூன்று பேர் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையல் செய்து கொடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று திடீரென அடலின் ரெக்சி மற்றும் செல்வராணி இருவரையும் பணி செய்ய வேண்டாம் என கூறியதாக அறியப்படுகிறது. இந்த தகவல் அந்தப் பகுதியில் காட்டுத் தீ போல பரவியது.
இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஒன்று சேர்ந்து வந்து, எங்கள் பகுதியை சேர்ந்தவருக்கு வேலை இல்லை என்றால் எங்கள் குழந்தைகளை இங்கே படிக்க வைக்க மாட்டோம், நாங்கள் வேறு பள்ளியில் படிக்க வைத்துக் கொள்கிறோம் எனக் கூறியதுடன், பள்ளியில் சாதி பாகுபாடு இருப்பதாக கூறி குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த சோழத்தரம் காவல்துறையினர், மற்றும் கல்வி அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து வருகிறார்கள்.
மேலும் தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் பகுதியில் ஏற்கனவே குருங்குடி என்ற கிராமத்திலும் சிறுகாட்டூர் என்ற கிராமத்திலும் இதுபோல் சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க || அலட்சிய போக்குடன் உயிர்களில் விளையாடும் ராஜீவ் காந்தி மருத்துவமனை!!
சென்னை அடுத்த பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையை சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, பல்லாவரம் அடுத்த பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், தனியார் வணிகவழகமான சரவணா செல்வரத்தினம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கடைக்கும் மின் இணைப்பு வழங்காததால் ஜெனரேட்டர் மூலம் இயங்கி வருகிறது. அதிகப்படியாக ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் மாசு ஏற்படும் என்பதால் இன்று மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சரவணா செல்வரத்தின வணிக வளாகத்தை மூடி சீல் வைக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில், இதனை அறிந்த கடையின் ஊழியர்கள் சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீல் வைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் அதிகாரிகள். மிகப்பெரிய வணிக வளாகமான சரவணா செல்வரத்தினம் கட்டிடம் கட்டப்பட்டு இதுவரை மின் இணைப்பு பெறாமல் ஜெனரேட்டரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க || அலட்சிய போக்குடன் உயிர்களில் விளையாடும் ராஜீவ் காந்தி மருத்துவமனை!!
ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு, ஆஞ்சியோ சிகிச்சைக்கு நல்ல உடல் நிலையில் வந்த பெண்ணிற்கு, அலட்சியமான சிகிச்சையால் கையை அகற்றிய அவலம் ஏற்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜீனத். அவரது மனைவி ஜோதி (32) உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டுமென தனியார் மருத்துவர்கள் அறிவித்ததின் அடிப்படையில் கடந்த 13ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஜோதி அனுமதிக்கப்பட்டார்
உடலில் எந்தவித காயமும் இல்லாமல் ஆஞ்சியோ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு 15ஆம் தேதி ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சியோ சிகிச்சையில் எந்தவித அடைப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பின்னர், சிகிச்சை மேற்கொண்ட கை முழுவதும் வீக்கம் அடைந்தது கையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. கையில் இருக்கும் சதைகளை கீறினால் சரியாகிவிடும் என தெரிவித்ததுடன், கை கால்கள் என அனைத்து சதைகளையும் மருத்துவர்கள் கிழித்து எடுத்து விட்டதாகவும் இது தொடர்பாக மருத்துவர்கள் எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை எனவும், கேட்டால் ரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறது என்று மட்டும் தான் தெரிவிக்கிறார்கள் எனவும் குற்றம் சட்டியுள்ளார்.
மேலும், "நேற்று எனது மனைவியின் கையை எடுத்தால் மட்டும் தான் எனது மனைவி உயிர் பிழைக்க முடியும் என தெரிவித்து எனது மனைவியின் வலது கையை முழுவதுமாக எடுத்து விட்டனர். தற்போது இன்று இடது காலையும் எடுக்க வேண்டும் என தெரிவிக்கிறார்கள். நல்ல உடல்நிலையுடன் ஆஞ்சியோ சிகிச்சைக்கு வந்தால், இப்படி அலட்சியத்துடன் மருத்துவம் பார்த்து உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளிவிட்டனர்" என வருத்தத்துடன் தெரிவிக்கிறார் ஜீனத்.
இந்நிலையில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தனது x தளத்தில் இதனை கண்டித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த ஜோதி என்ற பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததன் காரணமாக கை அகற்றப்பட்டதாக செய்திகள் வருகின்றன" எனவும்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த ஜோதி என்ற பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததன் காரணமாக கை அகற்றப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 27, 2023
கடந்த ஆண்டு தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதே…
"கடந்த ஆண்டு தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவமும் ஏற்படுத்திய காயமே இன்னும் ஆறும் முன்னர் மீண்டும் இது போன்ற ஒரு துயர சம்பவம் நடந்திருப்பது, அலட்சியமும் அக்கறையின்மைக்கும் உதாரணமாக இருக்கும் இந்த விடியா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றது என்பதற்கான பெரும் எடுத்துக்காட்டு" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || எங்கடா இங்க இருந்த வாழைத்தாரை காணோம்.. கட்சிக் கூட்டத்தில் திமுக தொண்டர்களின் அலப்பறை!!
11 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த மூர்த்தி - ஏகவல்லி தம்பதியினருக்கு, ஒரு மகன் மற்றும் தீப்திகா என்கிற மகள் உள்ளனர். இதில் தீப்திகா ஆர் கே சாலையில் உள்ள மகளிர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்பாலிட்டு சிறுமி தீப்திகா சேலையால் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்காத காரணத்தினால் சந்தேகமடைந்த தீப்திகாவின் சகோதரர் கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்காத காரணத்தினால் அக்கம் பக்கத்தின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையும் படிக்க : 'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்து...!ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!
இதனை அடுத்து தீப்திகாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தீப்திகா உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து தகவலறிந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசாருக்கு, தீப்திகா நன்றாக படிக்கின்ற மாணவி என்பதும், அக்கம் பக்கத்தில் யார் என்ன வேலை சொன்னாலும் உடனடியாக செய்து முடிப்பார் என்பதும், நான்கு முறை விளையாட்டுப் போட்டிகளில் மெடல் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிறுமி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிதிகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து வருவதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பீட்டா, டபிள்யு.வி.எஸ்., ஐ.பி.ஏ.என் ஆகிய விலங்குகள் அமைப்புளுக்கு அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து நிதியை பெறுவதாகவும், கால்நடை ஆராய்ச்சி சம்பந்தமாக நிறுவனங்கள் நடத்தி வருவதாகவும், அதற்கு அரசிடம் உரிய அனுமதியை பெறவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலாளர் முத்துக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதையும், பயன்படுத்துவதையும் கண்காணிக்கும் நடைமுறைகள் உள்ளதாகவும், சட்ட விதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பீட்டா உள்ளிட்ட மூன்று அமைப்புகளுக்கு எதிராக மனுதாரர் அளித்த புகாரை, மத்திய பாதுகாப்பு முகமைகளின் ஆலோசனைகளை பெற்று, விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிக்க || போலீசுக்கே விபூதி அடிக்க நினைத்த மாந்திரீக கொள்ளையர்!