மளிகைக் கடையில் நூதன முறையில் திருட்டு - போலீசார் வலைவீச்சு

மளிகைக் கடையில் நூதன முறையில் திருட்டு - போலீசார் வலைவீச்சு
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மளிகைக் கடையில் நூதன முறையில் கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

உடுமலை அருகே  ஸ்டாலின் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடைக்கு வந்த  மர்ம நபர் ஒருவர்  ரூ 12 ஆயிரம் அடங்கிய மளிகை பட்டியலை கடைக்காரரிடம் கொடுத்து பொருட்களை ஒரு கோவிலுக்கு கொண்டுவரும்படி கூறியுள்ளார்.

பின்னர் பொருட்களை கொடுத்ததும் இன்னும் சில பொருட்கள் எடுத்து வரும்படி கூறியுள்ளார், பின்னர் கடைக்காரர் கோவிலுக்கு சென்று பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து பொருட்களுடன் தப்பிசென்றுள்ளார். பின்னர் ஏமாற்றத்தை உணர்ந்த கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com