கூடுதலாக சால்னா கேட்டதால் ஹோட்டல் ஊழியரை தாக்கிய இளைஞர்கள்...! வெளியான சிசிடிவி காட்சிகள்..!

கூடுதலாக சால்னா கேட்டதால் ஹோட்டல் ஊழியரை தாக்கிய இளைஞர்கள்...! வெளியான சிசிடிவி காட்சிகள்..!

புதுச்சேரியில் உணவகம் ஒன்றில் வாங்கிய உணவுக்கு கூடுதலாக சால்னா, சாஸ் தராததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கடாய் மற்றும் கரண்டியால் ஹோட்டல் ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

புதுச்சேரி லாஸ்பேட்டை காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு நேற்று முன்தினம் மாலை இரண்டு இளைஞர்கள் நூடுல்ஸ், பரோட்டா வாங்கி கொண்டு அதற்கு கூடுதலாக சால்னா மற்றும் சாஸ் கேட்டதாக தெரிகிறது. அப்போது உணவக ஊழியர் சால்னா இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கடாய் மற்றும் கரண்டியால் ஊழியரை தாக்குவது சிசிடிவி கேமிராவில் பதிவானதை அடுத்து இந்த காட்சிகளுடன் உணவகத்தின் மேலாளர் டேவிட், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரை தாக்கியது கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா மற்றும் ஜெய்கணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கூடுதல் சால்னா மற்றும் சாஸ்காக ஹோட்டல் ஊழியரை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க : அகில இந்திய போலீஸ் குழு விளையாட்டுப் போட்டி...! பதக்கம் வென்ற காவலர்கள்...!