கணவனுக்கு தெரியாமல் பாரதிராஜாவை மயக்கிய இளம்பெண்... தம்பியையும் மசியவைத்து மடக்கிய பயங்கரம்..!

25 வயது பெண் ஐஸ்வர்யா, பாரதிராஜா என்ற போலீஸ்கார இளைஞரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.

கணவனுக்கு தெரியாமல் பாரதிராஜாவை மயக்கிய இளம்பெண்... தம்பியையும் மசியவைத்து மடக்கிய பயங்கரம்..!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா. 25 வயதான இவர் திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக உள்ளார். 

3 மாதமாக, சென்னை, திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணியாற்றி வருகிறார். பாரதிராஜாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யா என்ற இளம்பெண் ஃபேஸ்புக்கில் பழக்கமானார். ஆவடியை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கு 26 வயதாகிறது. டாக்டருக்கு படித்து வருவதாக பாரதிராஜாவிடம் சொல்லி உள்ளார். ஒருகட்டத்தில், தன்னை செய்து கொள்கிறீர்களா என்றும் பாரதிராஜாவை கேட்டுள்ளார். டாக்டர் பெண் இப்படி கேட்கவும், அதற்கு சரி என்று சம்மதித்துள்ளார். அதன்பிறகுதான் ஐஸ்வர்யாவின் ஆட்டம் ஆரம்பித்தது. கல்யாணத்திற்கு பூஜை செய்ய வேண்டும், கல்யாணத்திற்கு நகைகள் வாங்க வேண்டும் என்று சொல்லி பணம் கேட்டுள்ளார். பாரதிராஜாவும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு முதல் தவணையாக 4 லட்சம் தந்துள்ளார்.

பாரதிராஜா அந்த பணத்தை ஐஸ்வர்யாவின் தந்தை பழனியின் வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக 14 லட்சம் வரை பாரதிராஜாவிடம் பணம் வாங்கி விட்டார் ஐஸ்வர்யா. இதற்கிடையில், ஐஸ்வர்யா, அவருடைய தங்கையை பாரதிராஜாவிடம் ஃபேஸ்புக்கில் அறிமுகப்படுத்தி உள்ளார். பாரதிராஜாவோ, தன்னுடைய தம்பி அதாவது பெரியப்பா மகன் மகேந்திரனை, ஐஸ்வர்யாவின் தங்கைக்கு முகநூலில் அறிமுகம் செய்து வைத்துள்ளர்.

ஐஸ்வர்யாவின் தங்கையும், மகேந்திரனும் ஃபேஸ்புக்கிலேயே நட்பானார்கள். சம்மதம் ஒருகட்டத்தில் மகேந்திரனை திருமணம் செய்ய, ஐஸ்வர்யாவின் தங்கை ஆசைப்பட்டுள்ளார். மகேந்திரனும் அதற்கு சம்மதம் சொல்லவே, ஐஸ்வர்யா போலவே கல்யாணத்துக்கு நகை வாங்க பணம் கேட்டுள்ளார் அவர் தங்கை. எனவே, மகேந்திரனும், கடந்த 6 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக 20 லட்சம் வரை வங்கி கணக்கில் ஐஸ்வர்யா தங்கைக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார். இதைதவிர, தங்க சங்கிலி, வெள்ளி கொலுசு என வாங்கி கொரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். 

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே ஐஸ்வர்யாவிடம் இருந்து எந்த தகவலும் பாரதிராஜாவுக்கு வரவில்லை. அதேபோல ஐஸ்வர்யாவின் தங்கையிடம் இருந்தும் மகேந்திரனுக்கு எந்த தகவலும் வரவில்லை. இதற்கு பிறகுதான் அந்த அதிர்ச்சி விஷயம் வெளியேவந்தது. பாரதிராஜா இதுவரை ஐஸ்வர்யாவை நேரில் ஒருமுறைகூட பார்த்ததே இல்லையாம். இவ்வளவு நாளும் போனில்தான் பேசி கொண்டு வந்தார்களாம். மகேந்திரனிடம் இதுவரை பேசியது ஐஸ்வர்யாவின் தங்கை இல்லை. அது ஐஸ்வர்யாவேதான். மகேந்திரனிடம், பாரதிராஜாவிடமும் ஒரே நேரத்தில் ஃபேஸ்புக்கில் சேட்டிங் செய்து வந்ததுடன், இருவரிடமும் போனில் குரலை மாற்றி மாற்றி பேசி வந்துள்ளார். 

அண்ணன் பாரதிராஜா 14 லட்சமும், தம்பி மகேந்திரன் 20 லட்சமும் தந்து ஏமாந்துள்ளனர். அண்ணன் - தம்பி சேர்ந்து இப்படி ஒரு பெண்ணிடம் ஏமாந்து போய்விட்டோமே என்று அதிர்ந்து போனார்கள். இதற்கு பிறகுதான், பாரதிராஜா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். கமிஷனர் சங்கர் ஜீவால் புகாரை ஆவடி ஸ்டேஷனுக்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஐஸ்வர்யாவையும், அவரது பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் பாரதிராஜா, மகேந்திரனுக்கு அடுத்தடுத்த ஷாக்குகள் காத்திருந்தன. 

ஐஸ்வர்யா டாக்டருக்கு படிக்கவேயில்லையாம். +2வரைதான் படித்துள்ளாராம். தனது அக்கா வைத்திருக்கும் ஃபேன்ஸி ஸ்டோரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதைவிட இன்னொரு ஹைலைட் உள்ளது. ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாம். கணவர் பெயர் சரண்குமார். ஆந்திர மாநிலம் நகரியில் வேளாண்மை துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 

ஐஸ்வர்யா இப்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறாராம். இவ்வளவும் செய்த அந்த ஐஸ்வர்யாவை அப்போதுதான் பாரதிராஜாவும், மகேந்திரனும் நேரில் பார்த்தனர். அதுவரை ஃபேஸ்புக்கில் வைத்திருந்த புரொபைல் போட்டோவும் ஐஸ்வர்யாவின் போட்டோ இல்லையாம். யாரோ ஒரு அழகான இளம்பெண்ணின் போட்டோவை வைத்து, ஏமாற்றி உள்ளார். 

அண்ணன் - தம்பி இருவரிடமும் வாங்கி மோசடி செய்த பணத்தை, ஆடம்பரமாக செலவு செய்து வந்ததாக போலீசில் சொல்லி உள்ளார் ஐஸ்வர்யா. இப்போது ஐஸ்வர்யா கைதாகி உள்ளார். ஃபேஸ்புக்கில் இன்னும் எத்தனை பேரை இவர் ஏமாற்றி இருக்கிறார் என்ற விசாரணையும் நடந்து வருகிறது. ஆக மொத்தம் வெறும் கவர்ச்சி பேச்சால், 34 லட்சம் வரை அண்ணன் - தம்பிகள் ஏமாந்துள்ளனர்.