மிடுக்காக உடை அணிந்து வந்து பாருக்குள் ரகளை செய்த இளைஞர்...! பரபரப்பான சிசிடிவி காட்சிகள்...!

மிடுக்காக உடை அணிந்து வந்து பாருக்குள் ரகளை செய்த இளைஞர்...! பரபரப்பான சிசிடிவி காட்சிகள்...!

நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த மாரிராஜ் (27) இன்று பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள மதுமானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அதே செட்டிகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் ரஞ்சித் பீட்டர் ரஞ்சித் பிரபாகரன், லிங்கேஷ் ராஜா ஆகிய நான்கு பேர் அங்கு சென்று மாரி ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் திடீரென கிருஷ்ணகுமார் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரிராஜை வெட்டியுள்ளார். பின்னர் உடனடியாக அருகிலிருந்த மாயாண்டி என்பவர் தடுக்க முயன்ற போது அவரையும் கிருஷ்ணகுமார் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வெட்டுப்பட்ட இருவரும் ஆத்திரத்தில் தரையில் கிடந்த கல்லை எடுத்து கிருஷ்ணகுமார் மீது எறிந்துள்ளனர். இதில் கிருஷ்ணகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர் மூன்று பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் கிருஷ்ணகுமாரின் நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய லிங்கேஸ் ராஜாவை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மருத்துவமனையை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அனைவரும் முதலில் அமைதியாக மது அருந்தியுள்ளனர். பின்னர் மிடுக்காக உடை அணிந்து வந்த கிருஷ்ணகுமார், மாரிராஜை அழைத்து தகராறில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகளை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : காதலனைக் கூட நம்பமுடியவில்லை... சிறுமிக்கு கொடுமை செய்த கயவர்கள் கைது...