பேஸ்புக் மூலம் பழகிய ஆண் நண்பர்...சிறுமிக்கு ஆசைவார்த்தைக் கூறி கடத்தி சென்ற பெண்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பேஸ்புக் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு ஆண் வேடம் அணிந்து வந்து பெண் ஒருவர் சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

பேஸ்புக் மூலம் பழகிய ஆண் நண்பர்...சிறுமிக்கு ஆசைவார்த்தைக் கூறி கடத்தி சென்ற பெண்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி. அதேபகுதியில் இயங்கி வரும் பள்ளியில்  பிளஸ் 1 படித்து வருகிறார்.  இந்நிலையில் மாணவிக்கு சமூக வலைதளமான பேஸ்புக் மூலம்  ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் நன்றாக பழகி வந்த ஆண் நண்பர், ஒரு வாரத்திற்கு  முன்பு சிறுமியின்  வீட்டிற்குச் சென்று அவரை  திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி ஏமாற்றி  கடத்தி சென்று உள்ளார்.  

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்தி சென்றவரை   சைபர்போலீசார் உதவியுடன் வலைவீசி தேடிவந்தனர். அப்போது, கடத்தபட்ட சிறுமி திருச்சூரில் இருப்பதாக தகவல்  தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று திருச்சூர் நகரிலிருந்து சந்தியா என்பவரை கைது செய்தனர் . பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையின் போது, அவர் ஆண் வேடம் அணிந்த பெண் என்பதும், இவர் கடந்த 2016-ல் ஒரு 14 வயது சிறுமியை இதுபோலவே தொல்லை கொடுத்து கடத்திச் சென்றதும் விசாரணையில் வெளியானது. 

தொடர்ந்து விசாரணையில், இவர் திருவனந்தபுரம் மாவட்டம் வீரன்னபுரம் பகுதியைச் சேர்ந்த  சந்தியா என்பதும், இவருக்கு ஏற்கனவே  திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் மனநிலை சரியில்லாததால் சமூக வலைதளங்களில், அவ்வப்போது ஆண் வேடத்தில் தோற்றமளித்து ஆணின் புனைப்பெயரில் சிறுமிகளை தொடர்புகொண்டு நட்புடன் பழகி வந்ததாக தெரிகிறது. 

ஆனால் இவர் எதற்காக சிறுமியை கடத்திச் சென்றார் என்பது இதுவரை தெரியவில்லை. இதற்கிடையில் சிறுமியை மீட்ட போலீசார் அவரை மருத்துவ  பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சிறுமியை ஏமாற்றி வீட்டில் இருந்து  கடத்திச் சென்ற சந்தியாவை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.