குழந்தையை விற்ற பணத்தை பறித்த மர்ம நபர்கள்...காவல் நிலையத்தில் புகாரளித்த பெண்...

சென்னை புழல் அருகே பெற்ற குழந்தையை விற்று எடுத்து சென்ற பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

குழந்தையை விற்ற பணத்தை பறித்த மர்ம நபர்கள்...காவல் நிலையத்தில் புகாரளித்த பெண்...

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த யாஸ்மின் என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இரண்டாவதாக யாஸ்மீன் கர்ப்பமாக இருந்த போது, கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் யாஸ்மீன் தனது மூத்த மகளுடன் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே சென்ற போது மர்ம நபர்கள் சிலர் யாஸ்மீனிடம் இருந்து பணப்பையை பறித்து சென்றதாக யாஸ்மீன் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், யாஸ்மீன் தனது இரண்டாவது குழந்தையை விற்று பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து  வழக்கு பதிவு செய்த போலீசார், பிறந்த குழந்தையை வாங்கி சென்ற நபர்களையும், பணத்தை பறித்து சென்ற நபர்களையும் தேடி வருகின்றனர்.