கள்ளத்தொடர்பை வெளியில் சொல்லிவிடுவேன்... பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை கொலை செய்த நண்பர்கள்...

ஓசூர் அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த ரவுடியை நண்பர்களே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளத்தொடர்பை வெளியில் சொல்லிவிடுவேன்... பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை கொலை செய்த நண்பர்கள்...
கிருஷ்ணகிரி மாவட்டம் கலுக்கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சு என்பவரின் மீது காவல்நிலையத்தில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்கு  நிலுவையில் இருந்து வருவதால் தனது நண்பர்களான சேத்தன், சந்தீப் ஆகியோருடன் தலைமறைவாக சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் மஞ்சு தனது நண்பர்கள் இருவரும் உறவுக்கார பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளனர். இதனை வெளியில் சொல்லி அவமானப் படுத்திவிடுவேன் என கூறி மஞ்சு அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் மஞ்சு கொலை செய்துள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி கணவனை காணவில்லை புகாரளித்ததன் பேரில் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்து புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து அவரது உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.