மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளக்காதலியுடன் வந்த மாமனார்! ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற மனைவி - மகன்!!

மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளக்காதலியுடன் வந்த தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற தாய் மற்றும் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளக்காதலியுடன் வந்த மாமனார்! ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற மனைவி - மகன்!!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி - ராஜேஸ்வரி தம்பதி. தச்சுதொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஆனால் நாராயணசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் தம்பதியிடையே  அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று  நாராயணசாமியின் மூத்த மகன் ராஜ்குமாரின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தந்தை நாராயணசாமி  தனது கள்ளக்காதலியுடன் வந்துள்ளார். இதனை கண்டு மனைவி ராஜேஸ்வரியும் மகன் ராஜ்குமாரும் கடும் ஆத்திரம் அடைந்ததால், கோவிலில் இருந்து நாராயணசாமி வீட்டுக்கு சென்று உள்ளார்.  இதனைத்தொடர்ந்து மனைவி ராஜேஸ்வரியும், மகன் ராஜ்குமாரும் வீட்டிற்க்கு சென்றனர்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த நாராயணசாமியை மகனும் மனைவியும் கண்டித்து உள்ளனர். இதனை நாராயணசாமி ஒரு பொருட்டாக மதிக்காததால், ஆத்திரம் அடைந்த மனைவியும் மகனும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து நாராயணசாமியை சரிமாரியாக வெட்டியும் குத்தியும் உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த நாராயணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நாராயணசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதற்குபிறகு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், கணவனை அரிவாளால் வெட்டிய மனைவியையும், மகனையும் கைதுசெய்தனர். 

மேலும், கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவனை மனைவியும் மகனும் இணைந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.