9 வருடங்களுக்கு முன்பு செய்த சம்பவம் ...வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்...

9 வருடங்களுக்கு முன்பு செய்த சம்பவம் ...வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்...

புதுச்சேரியில் 9 வருடங்களுக்கு முன்பு மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்து புதைத்த ரவுடி கணவர் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி அனிதா நகரை சேர்ந்த பிரபல தாதா கருணா இப்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார்.இவரும், இவரது தம்பி பாஸ்கரும் ஒரு கொலை வழக்கில் கடந்த 2009 ஆம் ஆண்டு கைதாகி  தண்டனை பெற்று வந்த நிலையில் கடந்த 2016 ஆண்டு நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் தெரிந்து கொள்ள | மானத்துக்காக பெற்ற மகளையே கொலை செய்த கொடூர தாய்...

பாஸ்கரின் மனைவி எழிலரசி இவர் கடந்த 9 ஆண்டுகளாக மாயமாகி இருந்த நிலையில் இது தொடர்பாக அவரது உறவினர்கள்  எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவர்கள் முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் எழிலரசியின் கணவர் பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்ட போது  கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் பரோலில் வெளியே வந்த போது தனது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது நண்பர்களான பிரகாஷ், கருப்பு சரவணன், பாம் வேலு ஆகியோர் உடன் சேர்ந்து தனது மனைவியை காரில் ஏற்றி கொண்டு காரிலயே கழுத்தை நெறித்து கொலை செய்து, முன்பே தான் வேல்ராம்பட்டு ஏரிகரை அருகே  தோண்டி வைத்திருந்த குழியில் புதைத்துள்ளனர், கடந்த 3 மாதங்களாக புறவழி சாலை பணிகள் நடந்து கொண்டிருந்ததால் இதில் பீதி அடைந்த பாஸ்கர் எழிலரசியை புதைத்த இடத்திற்கு சென்று அவரது எலும்பு கூடுகலை ஏரிகரையில் தூக்கி எறிந்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.