79ல் சம்பவம்.. அதுவும் பெத்த மகன்.. கதற கதற பறிபோன 4 உயிர்.. ஆடிப்போன இடுக்கி!!

இடுக்கி அருகே மகன் குடும்பத்தை, தந்தை வீட்டோடு தீ வைத்து கொளுத்தி எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

79ல் சம்பவம்.. அதுவும் பெத்த மகன்.. கதற கதற பறிபோன 4 உயிர்.. ஆடிப்போன இடுக்கி!!

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள சீணிக்குழி பகுதியைப் சேர்ந்தவர் அப்துல் பைசல் (45). இவருடைய மனைவி ஷீபா (45). இவர்களுக்கு மெஹர் (16), அப்சனா (14) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

முகமது பைசலின் தந்தை ஹமீது (79). தந்தை, மகனுக்கு இடையே கடந்த 3 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு தந்தை மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால், ஆத்திரம் அடைந்த தந்தை ஹமீது, மகனையும், அவரது குடும்பத்தையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக மகன் முகமது பைசல் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்த போது தந்தை ஹமீது வீட்டின் கதவை வெளியில் பூட்டி உள்ளார். பின்னர் வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றி வீட்டிற்கு தீ வைத்தார்.

இதனை அறிந்த பைசல் குடும்பத்தினர் படபடவென எழுந்து அக்கம்பக்கத்தினரை அலறி அலறி கூப்பிட்டனர். அதற்குள் தீ வீடு முழுவதும் பரவியது. இதில் பைசல் இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து தீயில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தொடுபுழா போலீசார் பைசலின் தந்தை ஹமீது மீது வழக்கு பதிவு, அவரை சிறையில் அடைத்தனர்.