பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை! 8 மாத கர்ப்பிணியான மகள்!!

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை நண்பருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.
பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை! 8 மாத கர்ப்பிணியான மகள்!!
Published on
Updated on
1 min read

விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தாய் இறந்து விட்டதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில்  10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வரும் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

இதை அறிந்த உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் இது குறித்து சிறுமியிடன் விசாரித்தபோது, அந்த சிறுமி கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் தாய் இல்லாமல் தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் இந்த சிறுமியை அவருடைய தந்தை கோவிந்தன்  தனது   நண்பரான கந்தகோணி என்பவருடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி, தன் தந்தையின் மீது  மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தை கோவிந்தனையும், அவரது நண்பர் கந்தகோணி என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com