காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்... ஆசையோடு பார்க்க வந்த மகளை வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை.! 

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்... ஆசையோடு பார்க்க வந்த மகளை வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை.! 

தென்காசியில் காதல் திருமணம் செய்த மகளை தந்தையே வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள தெற்குகாவலாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45).  இவரது மகள் ஷாலோம்ஷீபா (வயது 19). இவர் அதே கிராமத்தை  சேர்ந்த கூலித் தொழிலாளியான முத்துராஜ் (வயது 22)  என்பவரை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தார். இந்த காதல் ஷீபாவின் வீட்டிற்கு தெரிந்து இவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் 6 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அதே கிராமத்தில் அடுத்த தெருவில் இருவரும் வசித்து வந்தனர். ஆனாலும் பெற்றோரின் கோபத்தால் தனது தாய் வீட்டிற்கு செல்லாமல் ஷீபா இருந்துள்ளார்.

இந்நிலையில் கிராமத்தில் நடந்த கோபில் திருவிழாவிற்கு சென்ற தம்பதியர் அதிகாலை சாமக்கொடை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். வரும் வழியில் தனது தந்தை வீடு இருந்ததால் அங்கு செல்வதாக கூறி ஷீபா  சென்றுள்ளார். தன் பேச்சை மீறி காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த ஷீபாவின் தந்தை மாரிமுத்து தனது மகளை வீட்டிற்குள் வீடாமல் தடுத்து நிறுத்தியதுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து தனது மகள் ஷீபாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஷீபாவை உறவினர்கள்  சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி ஷீபா உயிரிழந்தார். 

இது குறித்து ஊத்துமலை காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து மகளை வெட்டி படுகொலை செய்த தந்தை மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் பெற்று வளர்த்த மகளை தந்தையே வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.