கடன் கொடுத்த மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி உடலை சாக்கடையில் வீசிய தம்பதி...

டெல்லியில் கடன் கொடுத்த மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி உடலை சாக்கடையில் வீசிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடன் கொடுத்த மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி உடலை சாக்கடையில் வீசிய தம்பதி...

டெல்லியில் கவிதா என்ற 72 வயது மூதாட்டி, பக்கத்து வீட்டில் வசித்த அனில் ஆர்யா - தன்னு ஆர்யா தம்பதியினருக்கு ஒன்றரை லட்ச ரூபாயை கடனாகக் கொடுத்துள்ளார். இதனை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கணவன்-மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து, தனியாக இருந்த மூதாட்டியை பலமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

உடலை மூன்று துண்டாக வெட்டி, அங்கிருந்த சாக்கடை கால்வாயில் போட்டுள்ளனர். அதற்கு முன்னரே மூதாட்டி சடலத்தில் இருந்து நகைகளை எடுத்த தம்பதி, அந்த நகையை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 70 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடூர கொலை தொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.