பள்ளி சென்ற சிறுவன் திடீரென உயிரிழந்த சோகம்...காரணம் கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

பள்ளி சென்ற சிறுவன் திடீரென உயிரிழந்த சோகம்...காரணம் கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

புதுக்கோட்டை மாவட்டம்,  ஆலங்குடி அருகே பள்ளிக்கு சென்ற சிறுவன் திடீரென உயிரிழந்ததற்கான காரணம் கேட்டு உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான் விடுதி பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து. இவரது 9 வயது மகன் நித்தீஷ்குமார்  அதே பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவர் நித்தீஷ்குமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே மாணவர் உயிரிழப்பிற்கு காரணம் கேட்டு, அப்பகுதி மக்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். இதற்கிடையே பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிந்த நல்ல பாம்பை பொதுமக்கள் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.