உணவகத்தில் லாவகமாக நுழைந்து திருடும் திருடனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

உணவகத்தில் லாவகமாக நுழைந்து திருடும் திருடனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

சங்கரன்கோவில் உணவகம் ஒன்றில் லாவகமாக நுழைந்து திருடும் திருடனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேற்று முன்தினம் இரவு மெயின் சாலையில் உள்ள உணவகம் ஒன்றின் பின்பகுதியில் காத்தாடி மாட்டுவதற்காக இடப்பட்ட துளை வழியாக லாவமாக நுழையும் திருடன் அந்த ஓட்டலில் கேஷ் கவுண்டர் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நிதானமாக நடந்து சென்று கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

உணவகத்தின் பின்புறம் பேருந்து நிலையத்தின் விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் ஆள் அரவமற்று காணப்படுவதால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையன் உணவகத்தின் பின்பகுதியில் உள்ள சிறிய ஓட்டையை பயன்படுத்தி உள்ளே நுழைந்து கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி கட்சியின் அடிப்படையில் திருடனை தேடும்படியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.