பாலியல் வன்கொடுமை வழக்கில் வழக்கறிஞர்கள் சங்கம் ஆஜராவதில்லை என தீர்மானம்...!

பாலியல் வன்கொடுமை வழக்கில் வழக்கறிஞர்கள் சங்கம் ஆஜராவதில்லை என தீர்மானம்...!

பரமக்குடியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சங்கம் ஆஜராவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக நகர் அவை தலைவரும், நகர் மன்ற மூன்றாவது வார்டு கவுன்சிலர் சிகாமணி,  மறத்தமிழர் சேனைக்கட்சியின் தலைவர் புதுமலர் பிரபாகரன் , ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையும் படிக்க : அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்... பாஜக - அதிமுக கூட்டணி உடைகிறதா...?

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதற்கு உடந்தையாக இருந்த கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், பரமக்குடி பார் அசோசியேசன் சார்பில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.