இளம்பெண் பாலியல் வழக்கு: 4 பேருக்கு சாகும்வரை சிறை தண்டனை உறுதி!

இளம்பெண் பாலியல் வழக்கு: 4 பேருக்கு சாகும்வரை சிறை தண்டனை உறுதி!

கும்பகோணத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த 27 வயது இளம்பெண் வங்கி பணிக்காக கும்பகோணம் வந்த நிலையில், 4 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.

இதையும் படிக்க : மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்!

இது தொடர்பான வழக்கில் 4 பேரும் சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும் என ஆயுள் தண்டனையும், ஆட்டோ ஓட்டுனருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.