பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் போக்சோவில் கைது!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்து வந்த ஆசிரியர் போக்சோவில் கைது!!

செந்துறை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன், ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர், மாணவிகளிடம் பாலியல் தொடர்பான வார்த்தைகளை பேசுவது, பாலியல் ஆசைகளை தூண்டுவது, பாலியல் சீண்டல் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆசிரியர் ஜெயராமனை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.