தேனி அருகே பரபரப்பு... தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் படுகொலை...
தேனி அருகே தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்குகளை இனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் மாற்றப்படுவர். அதன்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரை மதுரைக் கிளையில் வழக்குகளை விசாரிக்க உள்ள நீதிபதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரையில் உள்ள நீதிபதிகள் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்படி, அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த மூன்று மாதங்களுக்கு எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளதால் இனி, இந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளார்.
இதையும் படிக்க: "நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள்" நீதிபதிகள் அதிருப்தி!
சின்னசேலத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வின்போது, அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன் மற்றும் அன்பு பழனி, சண்முகம் ஆகியோர் இன்று சின்னசேலத்தில் உணவகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில் சின்னசேலம் சேலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஹார்ட் பீட் என்ற கடையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சத்துணவு முட்டைகள் அங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் சத்துணவு முட்டைகள் சுமார் 100 எண்ணிக்கையிலான முத்திரை இடப்பட்ட முட்டைகள் இந்த கடையில் இருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். முட்டை வைத்திருந்த அந்த கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து பல்வேறு கடைகளில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் உணவு தரமாக தயாரிக்கப்படாமல் இருந்த கடைகளுக்கு ரூபாய் 3000 முதல் 5000 வரை அபராதம் விதித்தனர்.
உணவின் தரத்தை ஆய்வு செய்யச்சென்ற இடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் எப்படி வந்தன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிக்க:"நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள்" நீதிபதிகள் அதிருப்தி!
எதிரிகளுக்கு பயந்து தலைமறைவாக இருந்த ரவுடி ஒருவர் தனியாக இருந்த பெண்ணின் அறையில் புகுந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராயப்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பிரபல நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை பணிக்கு செல்வதற்காக தனது அறையில் இருந்த போது, உள்ளே நுழைந்த மர்ம நபர் வீட்டின் கதவை தாளிட்டு தவறாக நடக்கமுயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டு, அந்தநபரை உள்ளே வைத்து பூட்டி விட்டு காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாசாலை போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிடிப்பட்ட நபர் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லிட்டில் ஜான் என்பதும், அம்பத்தூர், கீழ்பாக்கம், சோழாவரம், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் 2 கொலை வழக்கு உட்பட 52 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எதிரிகளுக்கு பயந்து தலைமறைவாக இருப்பதற்காக துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் செக்ரியூட்டி ஏஜென்சியில் சேர்ந்து, கடந்த 2 நாட்களாக இந்த அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் தங்கி காவலாளியாக பணியாற்றி வந்ததும், இந்த வீட்டில் வடமாநில பெண் ஒருவர் தனியாக இருப்பதை கண்டதும் சபலத்தில் தவறு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அண்ணா சாலை போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க : காவிரி கர்நாடகாவின் சொத்து அல்ல...அனைத்து மாநிலங்களுக்கும் காவிரி சொந்தம் - டி.கே.எஸ்.இளங்கோவன்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கை, அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7வது முறையாக நீட்டிக்கபடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காவிரி கர்நாடகாவின் சொத்து அல்ல...அனைத்து மாநிலங்களுக்கும் காவிரி சொந்தம் - டி.கே.எஸ்.இளங்கோவன்
சேலத்தில் முதலாளியை கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பியோட முயன்ற முன்னாள் ஊழியரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். சீலநாயக்கன்பட்டியில் கடந்த 8 ஆண்டுகளாக பழைய வாகனங்களை வாங்கி உடைத்து, விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரிடம் முனியப்பன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையும் படிக்க : வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... !
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முனியப்பனை வேலையில் இருந்து அன்பழகன் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் கடையில் தனியாக இருந்த அன்பழகனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ஒரு லட்சம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
இதனை கண்ட சக ஊழியர்கள் அவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து கொலை செய்த முனியப்பனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.