கரப்பான்பூச்சி போல கவிழ்ந்த லாரி.... இருவர் பலி, மூவர் காயம்!

எருமையூர் அருகே சாலையோரம்  பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி, மூவர் காயமடைந்துள்ளனர்.

கரப்பான்பூச்சி போல கவிழ்ந்த லாரி.... இருவர் பலி, மூவர் காயம்!

தாம்பரம் அடுத்த எருமையூர் செக்போஸ்ட் அருகே, லாரியில் ஆந்திரா கடப்பாவில் இருந்து கடப்பா கல் ஏற்றிக் கொண்டு வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சம்பவ இடத்தில் சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

கரப்பான் போல தலைகீழாக கவிழ்ந்த விழுந்த விபத்தில் கடப்பா கல், லாரியின் மீது அமர்ந்திருந்த சிவா ரெட்டி மற்றும் வரதராஜீ ஆகியோர் மீது விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க | ராமாபுரத்தில் நடந்த விபத்து! டிரைவர் உட்பட 7 பேர் படுகாயம்!

கடப்பா கல்லில் சிக்கியிருந்த ஓட்டுநர் லட்சுமணய்யா(36), அவரது மகன் வாசு, மற்றும் சுப்பா நாயுடு(50), ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கடப்பா கல்லில் சிக்கியவர்களை தாம்பரம் தீயணைப்பு துறையினர் மீட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மதுபோதையால் நடந்த கோரம்! மாணவரின் உறுப்புகள் தானம்!