மனைவியை பெற்ற மகனுடன் சேர்த்து சந்தேகப்பட்ட தந்தை.. தகராறின் உச்சத்தில் மனைவியை அடித்து கொன்ற கணவன்!!

சிவகங்கை அருகே  நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை பெற்ற மகனுடன் சேர்த்து சந்தேகப்பட்ட தந்தை.. தகராறின் உச்சத்தில் மனைவியை அடித்து கொன்ற கணவன்!!

சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மார்க் ஆண்டனி. திருமணமான இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், ரவீந்திரன், நவீன் என்கிற இரு மகன்களும் உள்ளனர்.

தனது மூத்த மகனுக்கும், தனது மனைவிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக கூறி மார்க் ஆண்டனி அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல் இன்று காலை மார்க் ஆண்டனி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் முற்றிய தகராறில் மார்க் ஆண்டனி உடற்பயிற்சி செய்யும் உபகரணைத்தை எடுத்து, மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் காவல்நிலையத்தில் சரணடைந்த மார்க் ஆண்டனி கொடுத்த தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மார்க் ஆண்டனியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.