சார் ஒரு பூசாரியாம்.. 50 வயதிலும் Facebookல் சில்மிஷம்.. ஒரே அமுக்காக அமுக்கிய காவல் துறை

பூசாரி வேலை பார்த்து கொண்டு ஆபாச லீலையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சார் ஒரு பூசாரியாம்.. 50 வயதிலும் Facebookல் சில்மிஷம்.. ஒரே அமுக்காக அமுக்கிய காவல் துறை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கணிபூர் அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருக்கு பாலாஜி என்ற இன்னொரு பெயரும் உண்டு..  பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். 50 வயது ஆகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. இவர் வெங்கிட்டாபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

பூஜை நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் ஃபேஸ்புக்கில் தான் இருப்பாராம். போலி அக்கௌன்ட் தான் வைத்துள்ளார். அதிலும் சிறுமிகளின் ஆபாச விடியோவை தேடி புடித்து அப்லோட் செய்து வந்துள்ளார்..

இதுகுறித்து NCMEC சைபர் டிப்லைன் என்ற பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில், உடுமலை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாலாஜியின் செல் நம்பர் வைத்து அவரின் இருப்பிடதை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் தன்னை சுற்றி வலைத்ததை பார்த்து அதிர்ந்து போனார் பூசாரி.. உடனே அவரை கைது செய்து போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.