பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோஷ்டி தகராறில் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவத்தில் ஒரு தரப்பினரை கைது செய்த காவல்துறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு !

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டயை அடுத்த எறையூர் கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு ஒரே சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு கோஷ்டிகள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி, இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் வீச்சரிவாளுடன் ஒருவரை தாக்கும் வீடியோ வைரலானது. இதையடுத்து எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் மனோஜ், அலெக்சாண்டர், ஜஸ்டின் பவுல்ராஜ் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர், கைது செய்து  சிறையில் அடைத்தனர்.  

ஆனாலும், இரு தரப்பினரின் மோதல்கள் குறையாமல் இருந்ததை அடுத்து, கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.